2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் குறித்து விசாரணை: ஹரீஸ் எம்.பி. உறுதி

Super User   / 2011 ஜூலை 10 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகஸ்தரால் பிராந்திய ஊடகவியலாளர் மப்றூக் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் கல்முனை மாநகர மேயர் முறையான விசாரணையை மேற்கொள்வார் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்தார்.

கல்முனை மாநகரில் மேற்கொள்ளப்படவுள்ள 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் இடம்பெறவுள்ள அபிவித்தி நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.எம்.பஷீர்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதி தலைவர் ஏ.எம்.மஜீட் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கல்முனை மாநகர சபை நிர்வாக உத்தியோகஸ்தர் எம்.ஏ.எம்.அலாவுத்தீன் பிராந்திய ஊடகவியலாளர் மப்றூக்கை தொலைபேசி மூலம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கல்முனை மாநகர சபை என்ன நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஊடகவியலாளர் மப்றூக் அச்சுறுத்தப்பட்டமையானது பாரியதொரு சம்பவமாகும்.
இவ்விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலானாவிடம் உத்தரவிடுவேன். அதற்கிணங்க, குறித்த நிருவாக உத்தியோத்தரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேயர் மேற்கொள்வார். அதற்கான உத்தரவாதத்தினை நான் உங்களுக்கு வழங்குகின்றேன்" என்றார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

"அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செய்யும் நல்ல காரியங்களை ஊடகவியலாளர்கள் செய்திகளாக வெளியிடும் போது சம்பந்தப்பட்டோர் மகிழ்ச்சியடைகின்றார்கள்.

ஆனால், அவர்களின் தவறுகளை சுட்டி காட்டும் போது, அதே அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்றார்கள் அல்லது வசைபாடுகின்றனர்" என்றனர்.


You May Also Like

  Comments - 0

  • Ahamed Junaid Monday, 11 July 2011 07:51 PM

    எதுவுமே நடக்காது நிச்சயம் நம்புங்கள் .

    Reply : 0       0

    ameer Monday, 11 July 2011 10:04 PM

    இன்னுமோர் தேர்தல் பிரசார உத்தி. ஒன்றும் நடக்காது . தேர்தல் காலங்களில் போடும் தாளம் இது.

    Reply : 0       0

    aboobucker Wednesday, 27 July 2011 06:02 AM

    நடக்கும்; அனால்,நடக்காது. அட போங்கயா. அபூ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

7 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

7 hours ago - 0     - 6

மன்னிப்பு

7 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

7 hours ago - 0     - 5