Kogilavani / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை கடற்கரையை அண்டிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய பெருமளவு நுரையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடலில் இருந்து நுரைகள் வெளியேறி காற்றினால் அடித்துவரப்பட்டு கடற்கரையோரங்களிலும் ஊருக்குள்ளும் பரவியதையடுத்து மக்கள் அச்சமடைந்தனர்.
இது தொடர்பில் மீனவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
'இதுபோன்ற சம்பவங்கள் முன்னரும் பலதடவைகள் இடம்பெற்றுள்ளன. கடல் கொந்தளிப்பு ஏற்படும் காலங்களில் சிலவேளைகளில் சுழிக்காற்று வீசுமானால் இது போன்று நுரைகள் வெளியேறுவது வழமையாகும்.
ஆனால் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்தத்தின் பின்னர் மக்கள் இவ்வாறான விடயங்களில் கூடிய கவனம் செலுத்துகின்றனர்' என்று தெரிவித்தார்.

.jpg)

.jpg)
.jpg)
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago