2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மசூர் சின்னலெப்பையின் புதல்வருக்கு மு.கா.வினால் வழங்கப்பட்ட பிரதேச அமைப்பாளர் பதவியால் சர்ச்சை

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பதவியினை - தானே தொடர்ந்தும் வகிப்பதாகவும், இப்பதவியினை வேறு நபரொருவருக்கு வழங்குவதாக மு.காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும், தேசிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் அண்மையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அறிவித்தமையானது கட்சியின் தீர்மானமல்ல என்றும் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பி.ரி.இக்பால் கூறினார்.

மறைந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பைக்கான 'கத்தமுல் குர்ஆனும், நினைவுப் பேருரையும்' நிகழ்வு அண்மையில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உஇராயற்றிய மு.காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும், இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் - அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக - மறைந்த மாகாணசபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் புதல்வர் றியா மசூரை நியமிப்பபதாக அறிவித்தார்.  

ஆயினும், குறித்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பதவியை - தானே தொடர்ந்தும் வகித்து வருவதாகவும், அந்தப் பதவியிலிருந்து தன்னை நிறுத்தியதாகவோ அல்லது அதை வேறொரு நபருக்கு வழங்கியதாகவோ கட்சியால் எழுத்து மூலம் தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராகச் செயற்படும் பி.ரி.இக்பால் கூறினார்.

இதேவேளை, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் - பொத்துவிலில் இடம்பெற்ற மு.காங்கிரஸின் பயிற்சிப் பட்டறையின் போது, அட்டாளைச்சேனைப் பிரதேச இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளராக றியா மசூரை நியமித்துள்ளதாக ஜெமீல் தெரிவித்த விடயமானது ஒரு சர்ச்சையாக எழுந்ததாகவும், இதன்போது – றியா மசூர் என்பவருக்கு வழங்கியதாகக் கூறப்படும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பதவியினை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும், மு.காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசனலி தெரிவித்ததாக பி.ரி.இக்பால் மேலும் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து, இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீலிடம் நாம் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பதவி மசூர் சின்னலெப்பையின் புதல்வாரன றியா மசூருக்கே வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் பதவியினை வகித்த பி.ரி.இக்பால் என்பவருக்கு மேற்படி பதவியை ஒரு வருட காலத்துக்கே நாம் வழங்கியிருந்தோம். அந்தப் பதவினை அவர் பெற்று இரண்டு வருடங்களாகி விட்டன. எனவே, அவருக்கு வழங்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பதவி ஒரு வருடத்துக்கு முன்பே காலாவதியாகி விட்டது.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த இக்பால் என்பவர் - அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸினை வளர்த்தெடுப்பதற்குரிய எவ்விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை.

மேலும், றியா மசூரை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நான் அறிவித்த நிகழ்வில் மு.காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி.ஹசனலி ஆகியோரும் இருந்தனர். அவர்களிடம் கலந்தாலோசித்த பிறகே – றியா மசூரை அந்தப் பதவிக்காக நான் அறிவித்தேன்.

இவை தவிர, முஸ்லிம் காங்கிரசின் - இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களை பிரதேச ரீதியாக நியமிக்கும் தற்றுணிவு கட்சியின் இளைஞர் காங்கிரசினட தேசிய அமைப்பாளருக்கு உள்ளது. அதற்கிணங்கவே அந்தப் பதவியினை றியா மசூருக்கு நான் வழங்கினேன் என்றார்.

You May Also Like

  Comments - 0

  • ramees Thursday, 21 June 2012 07:33 AM

    இளைஞர்கள் என்பது 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இளைஞர் ஒருத்தருக்கு அமைப்பாளர் பதவியை விட்டு கொடுத்து விட்டு பேசினால் நல்லா இருக்கும்.

    Reply : 0       0

    Avathaani Thursday, 21 June 2012 01:04 PM

    முஸ்லிம் காங்கிரசின் - இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக இருப்பதற்கு தலைவர் அஷ்ரப்பினால் எந்த ஒரு வயது எல்லையும் யாப்பில் குறிப்பிடப்படவில்லை.

    Reply : 0       0

    youth leader Thursday, 21 June 2012 02:57 PM

    9-9=0 5-5=0

    Reply : 0       0

    kalmunai makan Thursday, 21 June 2012 03:20 PM

    ரமீஸ் மாமாவுக்கு ஜமீல் சேரோட வயசு நாற்பதுக்கு குறைய என்பது தெரியாதாக்கும். மாமா பிறந்து ஐந்து வருசத்துக்கு பிறகுதான் ஜமீல் சேர் பிறந்தார்.

    Reply : 0       0

    ibnuaboo Thursday, 21 June 2012 04:26 PM

    அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவராக மர்ஹும் பாக்கிர் மரிக்கர் மரணிக்கும் வரை இருந்தார்.

    Reply : 0       0

    face book Thursday, 21 June 2012 06:20 PM

    இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக வருபவர் ஒரு இளைஞர் ஆகத்தான் இருக்கனும்.

    Reply : 0       0

    almisfa Thursday, 21 June 2012 07:03 PM

    ஒன்றிலும் ஒன்ரும் இல்லை.............. எல்லாம் ...“

    Reply : 0       0

    siraj Friday, 22 June 2012 09:31 AM

    அல் மிஸ்பா உங்களைத்தான் இளைஞர் காங்கிரசில் வைப்பதாக சொல்கிறார்களே.

    Reply : 0       0

    zeefa Sunday, 24 June 2012 06:56 AM

    ஜெமீல் சார் உங்கட முடிவு வரவேற்கத்தக்கது. தந்தையை இழந்து அரசியலி்ல் தாங்கள் அனாதைகளாக ஆகி விட்டோம் என்ற குடும்பத;திற்கு இது ஒரு ஆறுதல் அல்லவா.. வாழ்க ஜெமீல் சார் வளர்க ஜெமீல் சார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .