2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'வீதி அபிவிருத்தியில் கல்முனைக்குடியை பிரித்துப் பார்ப்பது கண்டிக்கத்தக்க விடயம்'

Suganthini Ratnam   / 2012 ஜூன் 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 'ஜெய்க்கா' திட்டத்தின் மூலம் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதில் கல்முனைக்குடியை பிரித்துப் பார்ப்பதானது கண்டிக்கத்தக்க விடயமாகும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகளின் அபிவிருத்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட சில கிராமங்களில் கிழக்கு மாகாண 'ஜெய்க்கா' திட்டத்தின் மூலம் பல வீதிகளுக்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சபை தேர்தல் ஒன்றினை மக்களும் அரசியல்வாதிகளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அபிவிருத்திப் பணியில் பிரதேசவாதம் மற்றும் அரசியல் பிரிவினைகளை காட்டியிருப்பது என்பது தெட்டத் தெளிவாகின்றது.

 கல்முனைக்குடியில் கடற்கரைப்பள்ளி வீதி, சாஹிபு வீதி, பள்ளி வீதி, காஸிம் வீதி, அலியார் வீதி ஆகிய 5 முக்கிய வீதிகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளது.  இருந்தும் குறித்த 5 வீதிகளில்  பள்ளி வீதி மட்டும் வெறும் கண்துடைப்புக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.  எனவே, குறுகிய அரசியல் இலாபங்களை மறந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்ற சம்மந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும.; இங்குள்ள குறிப்பிடப்பட்ட சகல வீதிகளையும் நிர்மாணித்து மக்களின் நீண்டகால தேவையினை நிறைவேற்றித்தர வேண்டும் என்பதே பிரதேச வாழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் கல்முனை மாநகர உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • siraj Friday, 22 June 2012 06:49 PM

    நல்ல கருத்து தம்பி பறகத். ஆனால் குதிரைக்கட்சியின் அமைச்சர் என்ன சொல்கிறாராரோ அதனைத்தான் அவரின் சிசியன் மாகாண அமைச்சர் செய்வார்.

    Reply : 0       0

    meenavan Monday, 25 June 2012 06:37 AM

    தம்பி பரகத் உங்கள் கருத்து ஏற்கமுடியாதது... உங்களது கட்சி எம்.பி.இனது கையாலாகதன்மையே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதற்கு ஆதாரமாக தமிழ் மிரர் செய்திகளை திகதியுடன் குறிப்பிடுகிறேன், வாசித்து பாருங்கள்...
    மார்ச் 06 2012 கல்முனை தொகுதி எம்.பி ஹரிசின் திட்டங்கள் அனைத்தும் ஏற்றுகொள்ளபட்டதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி இணைத்தலைவர் அதா தெரிவிப்பு,
    மார்ச் 10 2012 தமிழ் மிரர் செய்தியில் கல்முனை தொகுதிக்கு 75 . 7 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என செய்தி உள்ளது, 3 மாதங்கள் கடந்த நிலையில் அந்நிதிகளை கல்முனைக்குடி பாதை அபிவிருத்தியில் பயன்படுத்த திராணி அற்று இருப்பது கல்முனைக்குடி புறக்கணிக்கபடுகிறது என்று எவ்வாறு சொல்ல முடியும்?

    Reply : 0       0

    janoovar Monday, 25 June 2012 07:51 AM

    மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் கல்முனைக்கு சென்று வீதிகளை ஆரம்பிக்கும் போது அங்குள்ள முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகள் அதனை தடுத்து நாங்கள் செய்வோம் என்று கூறுகிறார்கள். அவர்களும் செய்வதில்லை.

    Reply : 0       0

    மண்டப வீதியான் Monday, 25 June 2012 01:01 PM

    கல்முனையின் 13 , 14 , 15 ம் பிரிவு மக்களின் பெரும்பாலான மக்களின் விருப்பு வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட மாநகர உறுப்பினர், உங்களிடம் ஒரு வேண்டுகோள் நகர மண்டபவீதியின் பிரதான வீதியின் கிழக்கு நோக்கிய வடிகான் பல இடங்களில் இடங்களில் உடைந்து டெங்கு நோய் நுளம்பு பெருகும் வடிகானாக மாறி வருகிறது. அதை செப்பனிட்டு அங்கு வாழும் மக்களை டெங்கு நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .