2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் தமது கடமைகளை பொறுப்பேற்பு

Kogilavani   / 2012 ஜூன் 23 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ,ஜே.எம்.ஹனீபா)
இலங்கை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இரண்டாவது தடவையாகவும் உபவேந்தராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயீல் தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பதிவாளர் எச்.ஏ.சத்தார், திருமதி இஸ்மாயீல், விரிவுரையாளர்கள், மாணவர்கள், உலமாக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை புதிய பரிமானத்துடன் முன்னெடுக்கவுள்ளதாக உபவேந்தர் இஸ்மாயீல தனது இரண்டாவது பதவிப் பிரமான உரையில் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .