2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்களுக்கான சம்மேளனக் கூட்டம்

Kogilavani   / 2012 ஜூன் 23 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்களுக்கான சம்மேளனக் கூட்டமும், பயிற்சிப் பட்டறையும் இன்று சனிக்கிழமை காலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கெப்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூகப் பொலிஸ் சேவையின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தகனக தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், காரைதீவு தரைப்படை முகாமின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெயவர்த்தன, சம்மாந்துறை பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பாளர் எஸ்.எல்.சம்சுதீன், கெப்சோ நிறுவனத்தின் தலைவர் ஐ.ஏ.ஜப்பார், கெப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதுகாப்பு தொடர்பான விடயங்கள்;, சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்களின் பங்களிப்பு, சிவில் பாதுகாப்புக் குழு பற்றிய மேலதிக விளக்கங்கள், சம்மாந்துறை பொலிஸின் சமூகப் பொலிஸ் பிரிவு மேற்கொண்ட முன்மாதிரி வேலை திட்டங்கள், பொலிஸ் சேவை பற்றிய விரிவான விளக்கம் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .