2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திருக்கோவில் பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் மருத்துவ சேவை

Suganthini Ratnam   / 2012 ஜூன் 24 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை, திருக்கோவில் பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியலயத்தில் இலவச மருத்துவ சேவை நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின்  கருத்திற்கமைய 'இளமைத்துவத்திற்கு நாளை'
என்னும் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று 3ஆவது இராணுவ படைப்பிரிவின் அனுசரணையுடன் விசேட இந்த மருத்துவ சேவை நடைபெற்றது.

இதில்; அதிதிகளாக  3ஆவது இராணுவப்படைப்பிரிவின் தளபதி கரன்பெரேரா, வைத்தியர் சூளாசேனரத்தினா, திருக்கோவில் உதவிக்கல்விப் பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளருமான வி.குணாளன், கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இப்றாலெப்பை 3ஆவது படையணியின் கேணல் வசந்த, இராணுவ சிவில் நிர்வாகத்தின் அதிகாரி பிரிகேடியர் பிரதீப் தென்னக்கோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் இந்த மருத்துவ சேவையில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .