2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வட, கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க அரசு முன்வந்தமைக்கு சுதந்திர பட்டதாரி சங்கம் பாராட்ட

Super User   / 2012 ஜூன் 25 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மற்றும் வட மாகாண பட்டதாரிகளுக்கு எவ்வித பாகுபாடுமின்றி நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளமையை இலங்கை சுதந்திர பட்டதாரி சங்கம் பாராட்டு  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டம் மிக வேகமாக  அரசாங்கத்தினால் முன்னெடுத்து செல்லப்படுகின்றது.

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், அடுத்த கட்டமாக வடமாகாண வேலையில்லா பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

30 ஆண்டு காலமாக இடம்பெற்ற பாரிய யுத்த சூழலுக்கு மத்தியிலேயே கிழக்கு மற்றும் வட மாகாண பட்டதாரிகள் பட்டப்படிப்பை மேற்கொண்டனர். இவர்களின் அயராத முயற்சி மற்றும் தியாகங்களை நாம் வெகுவாக பாராட்ட வேண்டும். அத்துடன் பெற்றோரின் வழிகாட்டலினால் இன்று பட்டதாரிகளாக சமூகத்தில் நல்ல அந்தஷ்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் திறமைக்கு ஏற்ப பட்டதாரி நியமனங்களை வழங்க வேண்டிய சூழ்நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிழக்கு மற்றும் வட மாகாண பட்டதாரிகளுக்கு எவ்வித பாகுபாடுமின்றி நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளமையை இலங்கை சுதந்திர பட்டதாரி சங்கம் பாராட்டுகின்றது. அரசாங்கம் கிழக்கு மற்றும் வட மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதயபூர்வமான நன்றியை எமது சங்கம் தெரிவித்துக் கொள்கிறது".

இதேவேளை சங்கத்தின் செயலாளர் மனுல சமல் பெரேரா உள்ளிட்ட தூக்குழுவினர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில், சம்மாந்துறை பகுதிகளுக்கு விஜயம் செய்து வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்து பிரச்சினைகளை ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .