2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அங்கீகாரம்

A.P.Mathan   / 2012 ஜூன் 28 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனிபா)

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காஸிமின் வேண்டுகோளின் பேரில் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இதன் பிரகாரம் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை அலுவலகத்தில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பத்திரம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை மத்திய சுகாதார அமைச்சுக்கு அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அறிவித்துள்ளார். சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக அழிவுற்ற நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை பின்லாந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் 400 மில்லியன் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு இயங்கி வருகின்றது. இவ்வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு, சிறுவர் சிகிச்சை விடுதி, ஆய்வுகூட பிரிவு என பலவேறு பிரிவுகளையும் கொண்டு இயங்கி வருகிறது.

இங்கு நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மாத்திரமல்லாமல் காரைதீவு, அட்டப்பளம், ஒலுவில் போன்ற கிராமங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாதமொன்றுக்கு 4500 இற்கு மேற்பட்ட வெளி நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் சுமார் 400 பேர் வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை மாதாந்தம் சுமார் ஆயிரம் பேருக்கு இவ்வைத்தியசாலை கிளினிக் சிகிச்சையை வழங்கி வருகின்றது. அத்துடன் மாதமொன்றுக்கு சுமார் 250 கர்ப்பிணித் தாய்மார்கள் சிகிச்சை பெறுவதோடு 800 இற்கும் மேற்பட்டோர் ஆய்வு கூட பரிசோதனைக்கு வருகின்றனர். மேலும் 300 பேர் பற்சிகிச்சை பெற வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0

  • najeem Thursday, 28 June 2012 10:54 AM

    அமைச்சர் சுபைர் இறுதி அமர்வில் நல்ல கருமம் ஆற்றி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .