2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குழாய் நீர் நிறுத்தப்பட்டதால் குடிநீர் இன்றி திருக்கோவில் மக்கள் அவதி

Menaka Mookandi   / 2012 ஜூன் 29 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கிவந்த குழாய்நீர் கடந்த ஒருவாரமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்துமக்கள் குடிப்பதற்கு குடிநீர் இன்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக பல பிரதேசங்களில் குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கிவரும் நிலையில் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ள பொதுமக்கள் தேசிய நீர்வழங்கல் சபையின் மூலம் குழாய் நீரைப் பெற்று தமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இருந்தபோதும் நீர் வழங்கல் சபை கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையில் தொடக்கம் இன்றுவரை குழாய் நீரை நிறுத்தியுள்ளது. இதனால் குழாய்நீர் பாவனையாளர் தண்ணீரைப் பெறமுடியாமல் பல்வேறு அசௌகியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குழாயில் நீருக்கு பதிலாக காற்று மட்டும் வருவதாகவும் குடிநீரைத் தேடி அலைய வேண்டியுள்ளதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்திற்கான குழாய் நீரை சாகாமம் குளத்தில் இருந்து நீக் வழங்கல் அதிகார சபை குழாய்மூலமாக வழங்கிவருவதுடன் பொதுமக்களுக்கு எதுவித முன்னறிவுப்பு எதுவும் இன்றி குழாய் நீரை நிறுத்தியுள்ளது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .