2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 04 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தில் வறிய இந்து குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்து மகா சபையின் சுயதொழிலுக்கான உபகரணம் வழங்கலும் மாவட்ட செயற்குழு அங்குரார்பணம் செய்யும் நிகழ்வும் ஆலையடிவேம்பு இந்து மாமன்ற மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அதிதிகளாக இந்து மகாசபையின் தலைவர் வைத்தியர் சிவசங்கர், வைத்தியர் நந்தகுமார், ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் சந்திரசேகரம் ஆகியோர் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட இருவருக்கு தையல் இயந்திரங்கள்
உட்பட பல பொருட்களை வழங்கிவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்து மகா சபையின் அம்பாரை மாட்ட செயற்குழு தெரிவுசெய்யப்பட்டது.

இதன் தலைவராக அக்கரைப்பற்று விபுலானந்த இல்ல தலைவர் ரி.கைலாசபிள்ளை, செயலாளராக ஆலையடிவேம்பு இந்துமாமன்ற செயலாளர் சரவணபவான், பொருளாளராக ரனீஸ்வரன், உப தலைவராக பி.குணசிங்கம், உபதலைவராக பி.கந்தசாமி உட்பட 21 பேர் கொண்ட செயற்குழு தெரிவுசெய்யப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .