2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை நகர லயன்ஸ் கழகத்திற்கான புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 04 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சர்வதேச லயன்ஸ் கழகம்  306 சீ 2  கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 2012/2013ஆம் வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு வைபவமும், கௌரவிப்பு நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை காரைதீவு விபுலனந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெற்றது.

லயன் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட ஆளுநரின் விஷேட இணைப்பாளரும், சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிராந்தியம் 8க்கான திட்ட இணைப்பாளருமான லயன் எஸ்.சசேந்திரன் மற்றும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிராந்திய தவிசாளர் லயன் செல்வேந்திரன், மாவட்ட தவிசாளர்களான லயன் சுனில் திசானாயக்கா, லயன் குலரத்தினம், வலய தவிசாளர் சிறிவேல்ராஜ், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா ராசய்யா உட்பட மட்டக்களப்பு, அம்பாரை பிரதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புதிய நிர்வாகிகள் பதவிப் பிரமானம் செய்து கொண்டதுடன் சென்ற வருடம் அர்பணிப்புடன் சேவையாற்றிய உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் சர்வதேச தர சான்றிதழ்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




You May Also Like

  Comments - 0

  • haniffa Wednesday, 04 July 2012 08:47 AM

    புதிய நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள் பழைய நிர்வாகத்துக்கு நன்றிகள்

    Reply : 0       0

    misamsudeen Tuesday, 10 July 2012 05:26 PM

    பாட்டும் நானே தாளமும் நானே என்பதுபோல செய்தியும் ஹனிபாவே கருத்தும் ஹனிபாவே சபாஸ்.

    Reply : 0       0

    neethan Friday, 13 July 2012 03:08 AM

    தம்பி சம்சுடின், ஹனிபா என்ற வேற யாரும் கருத்துக் கூற முடியாதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .