2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'திவிநெகும' திட்டத்தின் கீழ் வாழ்வாதார பொருட்கள் விநியோக நிகழ்வு

Super User   / 2012 ஜூலை 04 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


'திவிநெகும' வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்காக வாழ்வாதார பொருட்கள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களிலிருந்து 2011ஆம் ஆண்டு விண்ணப்பித்து தெரிவு செய்யப்பட்ட 27குடும்பங்களுக்கு இந்த வாழ்வாதார மூலப்பொருட்கள் வழங்கப்பட்டன.

பிரதேசசெயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை அலுவலக முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் ஏ.சீ.ஏ.அன்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .