2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர சபை – யுனெப்ஸ் ஆகியன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்

Super User   / 2012 ஜூலை 05 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மாநகர சபை மற்றும் யுனெப்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் திண்ம கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று வியாழக்கிழமை யுனெப்ஸ் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தமானது 2012 ஜூலை மாதம் தொடக்கம் 2013 ஜூன் வரையான ஒரு வட காலத்திற்கு செயற்படும் இந்த ஒப்பந்தத்தில் கல்முனை சிராஸ் மீராசாஹிப், யுனெப்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட செயற்திட்ட முகாமையாளர் வி. சீலியா மாகர்ஸ் மற்றும்  மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதன் மூலம் திண்ம கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாட்டினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான செலவீனங்களில் 3,920,160 ரூபாவினை  யுனெப்ஸ் நிறுவனம் வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கினங்க, திண்ம கழிவகற்றல் செயற்பாடு தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் யுனெப்ஸ் நிறுவனம் மற்றும் கல்முனை மாநகர பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையில் ஒவ்வொரு மாதமும் இடம்பெறுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • Mohamed Thursday, 05 July 2012 03:02 PM

    மருதமுனையில் அமைக்கப்பட்ட நிலையத்தில் என்ன நடக்கிறது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .