2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சம்பாந்துறையில் இரு துருவங்களான அரசயில் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன: பிரதேச சபை தவிசாளர்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

'ஆண்டாண்டு காலமாக தக்கவைக்கப்பட்டு வந்த சம்மாந்துறை மண்ணின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தோடும் எமது மக்களின் ஒற்றுமைக்காகவும் ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம். அதாவது சம்மாந்துறை மண்ணில் இரண்டு துருவங்களாக இருந்து செயற்பட்டு வந்த அரசியல் சக்திகள் ஒன்றினைந்து அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளுவதற்காக ஒன்றினைந்துள்ளது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் தெரிவித்தார்

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் தேசியக் காங்கிரஸின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் சம்மாந்துறை நகர மண்டபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட், சிறப்பு அதிதிகளாக முன்னாள் மாகாண அமைச்சாரும் வேட்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, வேட்பாளர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேம்லால் றணகல, பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, உட்பட உலமாக்கள் கல்விமான்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு ஏ.எம்.எம்.நெஷாட் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரான நான் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் மூலம் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரிப்பதற்கான முடிவை நானும் என்னை நேசிக்கின்ற கட்சியின் தொண்டர்களும் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆகவேதான் என்னை நேசிப்பவர்களும், இந்த ஊரை நேசிப்பவர்களும், எதிர்கால சந்ததிகளையும் நேசிப்பவர்களும் எமது மன்னின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சரியான வியூகத்தை அமைச்சர் அதாவுல்லா வகுத்துள்ளார். அதற்கமைவாக நாம் வெற்றிலைச் சின்னத்துக்கும் எமது வேட்பாளர்களுக்கும் வாக்களித்து எமது வெற்றியை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து ஒற்றுமையுடன் வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் காலத்துக்கு மாத்திரம் வருகை தந்து வீரவசனம் பேசி மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் முஸ்லிம் தலைமைகளை நம்பி நாம் நமது பிரதிநிதிகளை இழந்து விடக்கூடாது அவர்கள் நமக்கு ஆரம்ப காலத்திலிருந்தே துரோகங்களை இழைத்த வந்ததை நாம் மறந்து விடக் கூடாது.

இவர்கள் இடத்துக்கிடம் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து மக்களை மடையர்களாக நெறிப்படுத்துவதனூடாக அவர்கள் சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

  Comments - 0

  • sabeer mohammed Sunday, 12 August 2012 07:46 AM

    இது என்ன சார், பள்ளி வாசல்களில் எந்த பிரச்சனைகள் ஏட்பட்டாலும் வாய்திறக்காம்ல் இருக்கும் மந்திரியை ஆதரிப்பதற்கான முடிவு சரியானது இல்லை என்பது வெட்டவெளிச்சம் .......... முடிவில் மாற்றம் வேண்டும்.இல்லாது விட்டால் உங்கள் புதிய கூட்டு தோல்வில்தான் முடியும்!

    Reply : 0       0

    Avathani Sunday, 12 August 2012 08:39 AM

    அல்ஹம்துல்லாஹ் !!!!!!
    தலைவா உன் வியூகம் வென்று விட்ட‌து !!!!!!

    Reply : 0       0

    rima Sunday, 12 August 2012 09:58 AM

    அதாவுல்லா, அமீர் சம்மாந்துறை மண்ணில் உங்களால் சத்தியம்மாக வெல்ல முடியாது. இது உண்மை.

    Reply : 0       0

    ihsan Sunday, 12 August 2012 04:12 PM

    ரோசம் இல்லயா?

    Reply : 0       0

    bish Monday, 13 August 2012 03:45 AM

    எல்லாம் சரி,, இது ஒரு அரசியல் கூட்டம் இங்கு அதிகாரிகளான ////அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேம்லால் றணகல, பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, //// இவர்களுக்கு என்ன வேலை? சட்டம் என்ன செத்தா போய்விட்டது??

    Reply : 0       0

    Sabeena Monday, 13 August 2012 05:58 AM

    அல்லாஹ்வை மறந்துவிட்டீர்கள்

    Reply : 0       0

    vaasahan Monday, 13 August 2012 08:15 AM

    சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளே வெற்றியை தரும். அன்வர் இஸ்மாயில் மரிக்கும் தருவாயில் அடைந்த உள்ளக் குமுறல் உன்களுக்குக் கேட்கமட்டாது. நீங்க‌ள் தனி வழி சென்றதால்தான் உங்கள் பின்னால் ஊர் அணி திரன்டது. நீங்கள் சில சிரேஷ்டமானவர்களின் உத்தரவை அமுல்படுத்த எடுத்த முடிவு இன்னும் சிந்தித்திருக்க வேன்டியது. அவசப்பட்டுட்டீங்க சேர் ஒரு கடைந்தெடுத்த ஊர்வாதியிடம் உன்கள் சகபாடிகளை அடகுவெச்சிடீங்க.

    Reply : 0       0

    ra Monday, 13 August 2012 09:51 AM

    சத்தியம்மாக வெல்ல முடியாது.

    Reply : 0       0

    manithan Thursday, 16 August 2012 12:18 AM

    bish, சரியாக கேட்டீர்கள்... நௌஷாட் சார் பிழையான முடிவு எடுத்து விட்டீர்கள்... தனித்துவம் பேணப்பட வேண்டும்....

    Reply : 0       0

    naushad Thursday, 16 August 2012 08:00 AM

    oru oorukku arasial viooham vahuppathu oru nalla arasial vaathiyin panbu.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X