2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அம்பாறை எஸ்.எஸ்.பி ரணகலவை நீக்க அமைச்சர் ஹக்கீம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை

Super User   / 2012 ஓகஸ்ட் 14 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல் தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகலவிற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனிடம் முறையிட்டுள்ளார்.

பொலிஸார் சிறந்த முறையில் செயற்படாமையினாலேயே குறித்த பிரச்சினை பாரதுரமானதாக மாறியது என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். இதன் காரணமாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவை நீக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'குறித்த பொலிஸ் அதிகாரி அமைச்சர் அதாவுல்லாவின் கையாள் போன்று கடந்த திங்கட்கிழமை செயற்பட்டார். இது தொடர்பில் நான் பொலிஸ் மா அதிபரிடம் பேசியுள்ளேன். பின்னர் எழுத்து மூலம் முறைப்பாடும் செய்யவுள்ளேன் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்களிடையே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல் காரணமாக பல வாகனங்கள் மற்றும் தேர்தல் காரியாலயங்கள் தேசமாக்கப்பட்டன.

இதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை பொலிஸார், மற்றும் இராணுவத்தினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல் திணைக்கம் கோரியுள்ளது என பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்தார்.

"பொலிஸ் மா அதிபர் பல விசாரணை குழுக்களை நியமித்துள்ளார். அப்பகுதியில் அன்றைய தினம் ஏற்படக்கூடிய வன்முறைகளை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையாளர் மேற்கொண்டுள்ளார். எனினும் வன்முறை மூன்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0

  • romen Wednesday, 15 August 2012 05:55 AM

    நீதி அமைச்சருக்கே இப்படி எனில்,சாதாரண அமைச்சர்களுக்கு எப்படி அநியாயம் நடக்கும் என்பதை அறியமுடிகின்றது தானே,இதே போன்று ஏனைய மாவட்டத்தில் பதவிகளில் உள்ளவர்கள் செய்யும் விடயங்களையும், நீங்கள் உடனடியாக பார்க்க வேண்டும். தங்களுக்கு நோய் வந்தால் மட்டும் தான் வலி என்பதற்கு அப்பால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலும் பங்கு கொள்ளுங்கள்.

    Reply : 0       0

    saken Wednesday, 15 August 2012 05:58 AM

    எஸ்.எஸ்.பியினை மாற்ற எடுத்த நடவடிக்கை சரி,அதை ஏன் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினீர்கள்.இதனால் நாட்டில் ஏனைய பகுதி முஸ்லிம்களுக்கு மீண்டும் பிரச்சினையை தோற்றுவிதது வட்டீர்களே .....சில விடயங்களை இரகசியமாக செய்ய வேண்டும்....

    Reply : 0       0

    RAMALAN Wednesday, 15 August 2012 02:24 PM

    முதலும் அறிக்கை விட்டு சில காலம் ஸ்டெப் வாபஸ் பண்ணியது அவருக்கு மறக்குது.

    Reply : 0       0

    Mohammed Hiraz Wednesday, 15 August 2012 04:41 PM

    பொது சேவை அரச நியமனங்களில் எல்லாம் அரசியல்வாதிகள் மூக்கை நுளைக்க கூடாது தப்பு தப்பு நீதி அமைச்சரே.

    Reply : 0       0

    shan Wednesday, 15 August 2012 04:50 PM

    இரகசியமாய் செய்ய இது ஒன்ரும் 4 சுவருக்குள் நடந்த விடயமல்ல.

    Reply : 0       0

    Mohamed Wednesday, 15 August 2012 11:10 PM

    இந்த விடயத்தில் அப்படி வெளியே சொல்லாவிட்டல் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் விடயம் விளங்காது, மக்களின் ஆத்திரத்துகாகவும் சொல்லித்தான் ஆகவேன்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X