2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அக்கரைப்பற்றில் எவரும் நோன்பு திறப்பதற்கு தடையில்லை; ஹக்கீமையே எதிர்த்தோம்: அதாவுல்லா

Super User   / 2012 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

"அக்கரைப்பற்றில் நோன்பு திறப்பதற்கு எவருக்கும் தடைகள் விதிக்கவில்லை. இனவாதத்தை பேசி நாட்டிற்கும், சமூகத்திற்கும், களங்கத்தை ஏற்படுத்துக்கின்ற ஹக்கீமையே நாம் எதிர்த்தோம்" என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்..

குறித்த மக்கள் எதிர்ப்புப் பேரணியில் தேசிய காங்கிரஸ் ஆதர்வாளர்கள் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
அக்கரைப்பற்றில் கடந்த திங்கட்கிழமை நடந்த எதிர்ப்பு பேரணி தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது.

இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் அதாவுல்லா,

"அம்பாரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூன்று சமூகங்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய  ஒரு நேர்மையான பொலிஸ் அதிகாரியும் யாருக்கும் பக்கச் சார்பாகவோ, அநீதியாகவோ செயற்படாத ஒருவர். இவரை குறைகூறி திரிவது தனது அரசியலுக்கு வங்குரோத்து நிலமை ஏற்பட்டுள்ளதையே காண முடிகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, நோர்வே மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்குடன் இணைத்து மீண்டுமொரு யுத்தத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.

இதற்கு எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் இம்மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நினைக்கின்றேன். அக்கரைப்பற்றில் நாங்கள் எவருக்கும் நோன்பு திறப்பதற்கு தடைகள் விதிக்கவில்லை.

இனவாதத்தை பேசி நாட்டிற்கும், சமூகத்திற்கும், களங்கத்தை ஏற்படுத்தி திரிகின்ற ஹக்கீமையே நாம் எதிர்த்தோம். முகமூடி மற்றும் கறுப்புடை அணிந்த முஸ்லிம் காங்கிரஸ் குண்டர்கள் சுமார் 35 பேருக்கு மேற்ப்பட்டவர்கள் வெளியூர்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அன்றிறவு அக்கரைப்பறிறில் நடமாடியதைக் கண்டு மக்கள் அச்சப்பட்டனர்.

இதன் விளைவாகவே அடுத்த நாள் ஹக்கீமுக்கு எதிராக அக்கரைப்பற்று மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இங்கு எவ்விதமான தங்கு தடையின்றி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நோன்பு திறந்து விட்டுச் சென்றுள்ளார்கள்.

இது எங்களுடைய பெருந்தன்மையாகும். தேசிய காங்கிரஸ் இந்நாட்டில் வாழ்கின்ற மூவின சமூகங்களையும் அனுசரித்து செல்கின்ற ஒரு தேசிய கட்சியாகும். அதன் பக்கம் மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தனது வாக்கு வங்கி குறைந்து காணப்படுவதால் அம்பாரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை குறை கூறுகின்ற அளவிற்கு அவருடைய தலைமைத்துவம் மாறியிருக்கின்றது.

எந்த தயவும் இல்லாமல் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே கைப்பற்றும். குறிப்பிட்ட சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்டி மக்களை குழப்பும் சிந்தனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். மக்கள் தெளிவாக விளங்கி செயற்பட வேண்டும்" என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாவுல்லா, கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எல்.ஏ. அமீர். எம்.எஸ்.உதுமாலெப்பை, சட்டத்தரணி ஆரிப் சம்சுத்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • pottuvilan Wednesday, 15 August 2012 05:39 PM

    கேட்பவன் கேனயன் என்றால் எருமை மாடும் ஏரேபிலேன் ஓட்டும் என்பார்களாம்.

    Reply : 0       0

    kalmunai makan Wednesday, 15 August 2012 11:03 PM

    இந்தத்தேர்தலில் இருந்து உங்களது கோட்டையில் ஓட்டை விழுகிறது

    Reply : 0       0

    Mohamed Wednesday, 15 August 2012 11:59 PM

    பத்திரிகை சுதந்திரம் அவர் சொல்லுவதையும் அழுதி ஏன் உன்மையையும் எழுதாமல் வாயடைத்துப்போய் இருக்கிறது? மக்களுக்கு உன்மையை அறியும் உரிமை இருக்கிறது. அமைச்சரின் கதைகளை எழுதி மக்களை குழப்பத்தேவை இல்லை. இதைவிட அதிகம் தெரிந்த மக்கள் இருக்கிறார்கள். ஊடகங்கள் உன்மைகளை தெரியப்படுத்தவிட்டால் மக்கள் அப்பத்திரிகைகளில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். உன்மையை எழுதி அனுப்பினால் பிரசுரிப்பார்களா?

    Reply : 0       0

    sabeer mohammed Thursday, 16 August 2012 01:47 AM

    சரியாத்தான் சொன்னேங்க கற்பனை கதையொன்றை அறிவித்திருக்கிறார் நம்ம மந்திரி .வாக்காளர் மக்கள்களின் மீது அவ்வளவு நம்பிக்கை போலும். வாக்காளர்களர்கள் கற்பனைகளை நம்பமாட்டாங் மந்திரி சார். மக்களிடம் சரியாக நடப்பித்ததை கூறுங்க?

    Reply : 0       0

    MSM Thursday, 16 August 2012 04:47 AM

    ஈமான் எந்தளவு உள்ளதோ அந்தளவு ஒருவன் பொய் சொல்ல பயப்படுவான்.

    Reply : 0       0

    abdula Thursday, 16 August 2012 07:12 AM

    இனவாதம் யார்ரா பேசுறாங்க மு.கா.உன்மை முஸ்லீம்களின் உயிர்நாடி.ஆடாதட ஆடாதடா மனிதா, படுக்கயில போட்டிடுவான் இறைவன் .

    Reply : 0       0

    faus Thursday, 16 August 2012 08:52 AM

    பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்ற சேர்வதில்லை என்பார்கள். கொள்கை இல்லாதவனுக்கு இலட்சியம் கிடையாது.

    தேசிய காங்கிரஸ் எனும் கட்சி ஒரு ஊருக்கு சொந்தமான கட்சியே தவிர இலங்கை தேசத்துக்கு சொந்தமானது அல்ல.
    சில்லறை கடை வைத்திருப்பவருக்கு வாடிக்கையாளர்கள் இருப்பதை போன்றுதான். அங்கும் இங்கும் கடன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

    Reply : 0       0

    junaid Thursday, 16 August 2012 12:05 PM

    அதாவின் வியூகும் விளங்கும் கொஞ்சம் சுணங்கும். அதா வெற்றி பெறுவார் இருந்து பாருங்க.

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 16 August 2012 01:24 PM

    சும்மா கிடந்த சங்க…… இது தேவையா உங்களுக்கு உங்க செயற்பாடுகளே மரம் மீண்டும் தலைக்க காரணமாக இருக்கிறது.

    Reply : 0       0

    Nizam Friday, 17 August 2012 10:19 PM

    நீங்கள் வெல்ல முடியாது..

    Reply : 0       0

    muzarrath Monday, 20 August 2012 08:12 AM

    அப்படி என்ரால் அக்கரைப்பத்துவில் முஸ்லிம் காங்கிரஸில் தேர்தலில் குதித்திருக்கும் தவம் போன்றவர்களின் நிலைமை என்ன?

    Reply : 0       0

    Maattrem Monday, 20 August 2012 11:10 AM

    தவமின் வெற்றிதான் அக்கரைப்பற்றில் நிச்சயிக்கப்பட்ட ஒரு விடயம். அதுதான் இந்த பதட்டத்துக்கு காரணம்.

    Reply : 0       0

    Basheer-Akp Tuesday, 21 August 2012 05:09 AM

    இன்ஷா அல்லாஹ், த‌வம் கரையோரத்திலேயே அதி கூடிய விருப்பு வாக்குகளை பெறுவார்...................................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X