2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'தன்மானமுள்ள முஸ்லிமால் ஸ்ரீ.மு.காவிற்கு வாக்களிக்க முடியாது'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

'நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அளிக்கின்ற ஒவ்வெரு வாக்கும் முஸ்லிம் சமுகத்தின் குரல்வளையை அறுப்பதற்கு வைக்கின்ற கூரிய கத்தி என்பதை நினைத்துச் செயற்பட வேண்டும். தன்மானமுள்ளதொரு முஸ்லிமால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இத்தேர்தலில் வாக்களிக்க முடியாது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுகின்ற தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அட்டளைச்சேனை பிரதான வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

க.ஆசுகவி அன்புடீன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, வேட்பாளர்களான முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஸ்ரீலங்;கா முஸ்லிம் காங்கிரஸ் தனது சமுகத்தைப் பற்றி சிந்திக்காது தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கையும் தனது வருமானத்தையும் உயர்த்திக் கொள்வதற்காக அன்னிய சக்திகளின் அடிவருடியாக மாறி கட்சியை அடகு வைத்து கபட நாடகமாடி வருகின்றது.

கடந்த மூன்று தசாப்த காலமாக இங்குள்ள மக்கள் பட்ட துன்பங்களும் வேதனைகளினதும் வடுக்களும் இன்னும் முழுமையாக மாறாமல் அந்த இழப்பிலிருந்து விடுபடாமல் இருக்கின்ற நிலையில் இந்த சமுகத்தை மீண்டும் அடகுவைத்து பலிக்கடாக்கள் ஆக்க திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கட்சியின் அமைப்பாளரான நான் இந்த சமுகத்தின் உயற்சிக்காகவும் எழுச்சிக்காகவும், தேசிய காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன். இது என்னுடைய சமூகத்துக்காக செய்யவேண்டிய தார்மீக பொறுப்பு என்பதை உணர்ந்து நானும் என்னுடைய ஆதரவாளர்களும் முடிவு செய்துள்ளோம்.

இதனை அடைந்து கொள்வதற்காக எனது சகோதரர் எம்.எல்.ஏ.அமீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அவரோடு இணைந்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் தேர்தல் வியூகத்தினால் கவரப்பட்டு சம்மாந்துறை சமூகம் ஒட்டு மொத்தமாக ஒன்றிணைந்து ஒரு புதிய யுகம் படைக்க அணிதிரண்டுள்ளனர்.

அதேபோன்று இந்த அட்டாளைச்சேனை மண்ணுக்கு தலமைத்துவம் வழங்கிய உதுமாலெப்பையை  கடந்த மாகாண சபைத் தேர்தலிலே உங்களது சொற்ப வாக்குகளால் வெற்றி பெறச் செய்ததால் அவர் முழு கிழக்கு மாகாணத்திற்கும் அபிவிருத்தியை அறிமுகப்படுத்திய உதாரண புருஷராக செயற்பட்டார்.

அவரை நாம் மீண்டும் அட்டாளைச்சேனை மக்களின்  அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறச்செய்வதோடு அவரோடு இணைந்து எம் சமூகத்திற்கு பணியாற்றி எம்.எல்.ஏ.அமீர், இளம் தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனையும் நாம் வெற்றியடையச் செய்து எதிர்வருகின்ற காலங்களில் எம் சமூகத்திற்கு ஏற்பட இருக்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய தலைவர்களாக நாம் அவர்களை உருவாக்க வேண்டும' என்றார்.


  Comments - 0

  • Suhaib Friday, 24 August 2012 08:44 AM

    சுயநலமுள்ளதொரு முஸ்லிமால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இத்தேர்தலில் வாக்களிக்க முடியாது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் தெரிவித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதால்தான் இவா்களைப் போன்றவா்களுக்கு பேரினவாதிகளிடம் மௌசு இருக்கின்றது என்பது எம்மில் பலருக்குப் புரிவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் அழிந்தால் இவா்களைப்போன்றோரை பேரினவாதிகள் தங்களின் வாசலுக்கும் எடுக்க மாட்டார்கள். எனவே இவா்களைப்போன்றவா்கள் அரசியலில் தொடா்ந்திருக்க முஸ்லிம் காங்கிரஸ் வாழ வேண்டும் என்பதனை யாவரும் புரிந்து கொள்ளவேண்டும். யுத்தத்தில் பகைவா்களுக்கு தப்புவதற்கு இடம் விட்டு போர் செய்வது போல் அரசியல்வாதிகளும் நடந்து கொள்ளவேண்டும். இல்லாதுவிட்டால் எல்லோரும் அழிந்து விடுவார்கள்.

    Reply : 0       0

    Riyas Friday, 24 August 2012 02:25 PM

    ஐயா , தன்மானம் என்ற விடயம் பற்றி கதைப்பதற்கு சமகால அரசியல்வாதிகள் யாருக்கும் யோக்கியமில்லை. காரணம் அந்த சரக்கு இவா்களிடம் இருந்தால் தற்போது இவா்கள் அரசியலை விட்டுவிட்டு தானும் தன்பாடும் என்று வீட்டோடு அடங்கியிருப்பா்.

    Reply : 0       0

    haf Friday, 24 August 2012 03:32 PM

    இந்த மாதிரியாக சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. முதல் unp. slmc தட்பொது pa அடுத்தது jvp. முதல் நீங்கள் ஒரு கச்சியில் இருங்க. அப்புறம் பார்க்கலாம்.

    Reply : 0       0

    kiyas Friday, 24 August 2012 03:35 PM

    சரியாக சொன்னீர்கள். இவர்கள் எல்லாம் இந்த மாதிரி தான் பேசுவார்கள்.......

    Reply : 0       0

    Free voice Saturday, 25 August 2012 01:27 AM

    இவர் இப்போது இருக்கின்ற பதவிககு உதவிய அசாத் சாலி எந்த கட்சி? அசாத் சாலி அனுபவித்து விரக்தியடைந்தவர். ஆனால் இவர்களுக்கு புரியாது.

    Reply : 0       0

    சிராஜ் Saturday, 25 August 2012 11:10 AM

    தன்மான இருந்திருந்திருந்தால் நீங்களெல்லாம் இங்கு இப்பாடி பேசுவீர்களா?

    Reply : 0       0

    enrtum ivan Monday, 27 August 2012 09:21 PM

    யாரு இவர்களில் தன்மானத்தை தாரை வாக்கும் உத்தம புருசர்கல்? பால் வைத்து பாதுகாத்தவனுக்கு பாசம் இல்லாமல் சீறிப்பாய்ந்த நல்ல பாம்புகள்.

    Reply : 0       0

    Najim Monday, 27 August 2012 09:46 PM

    ஏன்தான் இவர்களது புத்தி இப்படி வேலை செய்கிறதோ தெரியவில்லை. ஏறிய ஏணிகளை உதைத்துத் தள்ளுவது மட்டுமல்ல, ஏறிய பின் அந்த ஏணிகளே சரியில்லை என்று ஏளனம் செய்வது தாங்கள் அனுபவிக்கும் சொகுசுகளைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் என்பது சிறு குழந்தைக்கும் புரியும். இந்தக் காலகட்டத்தில் பேசாமல் இருந்தாலாவது ஏதாவது சமுதாயத்துக்கு நல்லது நடக்கும். ஏன்தான் பேசிக் கெடுக்கிறார்களோ?

    Reply : 0       0

    S.Sinasudeen Saturday, 01 September 2012 09:03 AM

    இவர் இப்போது இருக்கின்ற பதவிககு உதவிய அசாத் சாலி எந்த கட்சி? அசாத் சாலி அனுபவித்து விரக்தியடைந்தவர். ஆனால் இவர்களுக்கு புரியாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X