2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை த.தே.கூட்டமைப்பு கைப்பற்றும்: சம்பந்தன்

Super User   / 2012 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எஸ்.மாறன்)

"கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ்தேசிய கூட்டமைப்பே கைப்பற்றும். எனவே தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும்" என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொணடு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"இன்றைக்கு தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சனை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேசியப் பிரச்சனை தொடர்பாக சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஊடாக சில தீர்மானங்கள் எடுத்துள்ளது. அந்த தீர்மானங்களையடுத்து இலங்கையரசாங்கம் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் அதனை  முறியடிப்பதற்காக தமிழ் மக்கள் அரசுடன்தான் இருப்பதாக காட்டுவதற்காக தான் இலங்கை அரசாங்கம் இந்த கிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்துகின்றது.
இதேவேளை யுத்தத்தின் இறுதிக்காலத்தில் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் அந்த மீறல்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று பக்கச்சார்பற்ற நேர்மையான அறிக்கை வெளியிடவேண்டும் என்ற கருத்து வந்திருக்கின்றது.

2010 இல் வடமாகாண தேர்தல் நடக்கும் கூறினர். பின்னர் 2011 இல் நடக்கும் என கூறினர். அதன்பின் 2012 நடக்கும் என்றனர். இப்பொழுது 2013 இல். வடக்கு மாகாண தேர்தல் என கூறுகின்றனர். அவர்களுக்குத் நன்றாகத் தெரியும் வடக்கு மாகாணத்தில் தமிழ்மக்கள் தனிப் பெரும்பான்மையாக வாழுகின்றனர். தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறும் அது சர்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தியனுப்பும். அந்தசெய்தி தமிழ்மக்கள் உரிமையை வழங்கவேண்டும் என்று.

அதனால் இவற்றை எல்லாம் முறியடிப்பதற்காக கிழக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு இனவிகிதாசாரம் மாற்றப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருக்கின்றது என நினைத்து ஒருவருடம் இன்னும் கிழக்கு மாகாண சபை இருக்கும்போது அதனை கலைத்து தேர்தலை நடாத்துகின்றது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்; என ஜனாதிபதி எதிர்பார்க்கவில்லை.

மட்டக்களப்பில் 8 ஆசனங்களையும் அம்பாரையில் 3 ஆசனங்களையும் திருகோணமலையில் 5 ஆசனங்களையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும.; எனவே முறையாக தமிழ்மக்கள் தமது ஒட்டு மொத்த வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதன் மூலம் தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு முதலமைச்சர் பதவியை கைப்பற்றும்" என்றார் .





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X