2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கிழக்கில் தமிழர் முதலமைச்சராக வர வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்தை தாண்டி மு.கா.வின் முயற்சி வெற்றிய

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 29 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம்.றம்ஸான்)


'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியினால்தான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இல்லையென்றால், கிழக்கில் மீண்டும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென சர்வதேச நாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. அவற்றையெல்லாம் தாண்டியே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நாம் வென்றெடுத்துள்ளோம்' என்று மு.காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான விவகாரங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று சனிக்கிழமை காலை கல்முனை பர்ஜீஸ் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே – நாடாளுமன்ற உறுப்பினரர் ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமனம் செய்ய வேண்டுமென சர்வதேச நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டன. தேர்தல் நிறைவடைந்த பின்னர் அமெரிக்காவின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளக் இதற்காகவே இலங்கை வந்திருந்தார். இவைகளுக்கிடையில்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தியின் மூலமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

த.தே.கூட்டமைப்பின் அரசியலைப் போல், மு.கா. செய்ய முடியாது

கிழக்கு மாகாணசபையில் அரசுக்கு ஆதரவு வழங்குவதென மு.கா. எடுத்த முடிவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்விக்குட்படுத்தி வருவது கவலையளிக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைப் போல், மு.காங்கிரஸ் செய்ய முடியாது.

கிழக்கு மாகாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சியமைத்திருந்தால், முஸ்லிம்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக சிங்களப் பேரினவாதிகள் சத்தமிடத் தொடங்குவார்கள். கடைசியில் அது பெரும் ஆபத்தான முடிவினை ஏற்படுத்தும்.

த.தே.கூட்டமைப்பு கிழக்குத் தேர்தலை முன்வைத்தே முஸ்லிம்கள் குறித்துப் பேசியது. ஆனால், முஸ்லிம்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலான பேச்சுக்களை த.தே.கூட்டமைப்பு நேர காலத்துடன் ஆரம்பித்திருக்க வேண்டும்.

த.தே.கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் - அரச விரோத அரசியலுக்குப் பக்க பலமாக பல்வேறு தரப்புக்கள் உள்ளன. உலகெங்கும் வாழும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச நாடுகளென நிறை உதவிகள் உள்ளன.

ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இவ்வாறான பக்க பலங்கள் கிடையாது. எனவே, அரசை ஒட்டு மொத்தமாகப் பகைத்துக் கொண்டு, அரச விரோத அரசியலை மு.காங்கிரசினால் மேற்கொள்ள முடியாது.

தமிழ் இளைஞர்களுடைய தியாகம்தான் இலங்கையில் மாகாணசபை முறைமை ஏற்படுவதற்கு காரணமாகும். தமிழ் மக்களுடைய இந்த தியாகத்தினை நாம் ஒருபோதும் மறக்கவில்லை. சிறுபான்மை சமூகத்துக்கான தீர்வுத் திட்டமொன்றைப் பெறுவதற்காக, தமிழ் சமூகத்துடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உழைக்கும்.

இதேவேளை, மாகாண முறைமையினை பெறுவதற்குக் காரணமாக இருந்த தமிழ் சமூகத்துக்கு கிழக்கு மாகாணசபையில் ஓர் அமைச்சுக் கூட வழங்கப்படவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

அஸாத் சாலிக்கு அருகதையில்லை!
 
அண்மைக் காலமாக ஆஸாத்சாலி என்பவர் மு.காங்கிரஸை மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றார். எங்கள் கட்சியினை விமர்சிப்பதற்கு ஆஸாத்சாலிக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது.

பஸ்ஸுக்கு டிக்கட் எடுக்கப் பணமில்லாமல் வீதியில் அலைந்து திரியும் ஒருவருக்கு மனிதாபிமானத்துடன் பணம் கொடுத்து உதவுவதைப் போலதான், அஸாத்சாலி என்பவருக்கு கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மு.காங்கிரஸ் சந்தர்ப்பம் வழங்கியது. இதை வைத்துக் கொண்டு, கிழக்கு மக்களின் மேய்பராக அஸாத்சாலி தன்னை எண்ணி விடக் கூடாது.

அஸாத்சாலி ஒருபோதும் எந்தவொரு கட்சியிலும் உறுதியாக இருந்ததில்லை. ஐ.தே.கட்சியில் இருந்தார், பிறகு ஐ.ம.சு.முன்னணியோடு ஒட்டிக் கொண்டார். அங்கிருந்து விரட்டப்பட்டதும் மு.காங்கிரசிடம் தஞ்சம் புகுந்தார்.

ஹஜ் விவகாரத்தினை கவனிக்கும் பொறுப்பு ஆஸாத்சாலியிடம் வழங்கப்பட்டபோது, ஹஜ் யாத்திரீகர்களின் 06 கோடிக்கும் அதிகமான பணத்தை அஸாத்சாலி மோசடி செய்தார். இது ஜனாதிபதிக்குத் தெரியவந்தது. அதனால்தான், ஆஸாத்சாலியை ஜனாதிபதி ஓரங்கட்டினார். இப்படியானவர்தான் இப்போது முஸ்லிம் சமூகத்தின் நலன் குறித்துப் பேசுகிறார்.

அபாண்டமான குற்றச்சாட்டு


கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர்களில் யார் யாருக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுக்கலாம் என்பதை மு.காங்கிரசின் தலைவர்தான் தீர்மானித்தார். அதற்கும் எனக்கும் தொடர்புகள் கிடையாது.

ஆனால், மு.காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரொருவர் தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு - ஹரீஸ் எம்.பி.யும், கல்முனை மாநகரசபை மேயருமே காரணம் என்று கூறித் திரிகின்றார். இது அபாண்டமான குற்றச்சாட்டாகும். இதுகுறித்து நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை' என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கல்முனை மாநகரசபை மேயர் சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகரசபை மு.கா. உறுப்பினர்களான ஏ.எம். பரகத், எம்.ஐ. பிர்தௌஸ், சட்டத்தரணி ஏ.எம். றகீப் மற்றும் சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • Thennavan Sunday, 30 September 2012 05:18 AM

    இந்த பத்திரிகையாலர் சந்திப்பில் கலந்துகொண்டு புகைப்படத்தில் தெரிபவர்கள் யார்?

    Reply : 0       0

    Thennavan Monday, 01 October 2012 03:32 AM

    இனி வரும் தேர்தல்கலில் கல்முனைத் தொகுதியின் தோல்விக்கு இப்புகைப்படத்தில் நடிக்கும் கல்விமான்களே காரணமாக அமையலாம்.

    Reply : 0       0

    ஜோசியன் Sunday, 30 September 2012 04:40 PM

    பொதுதேர்தல் வந்தால் ஹரிசின் வில்லன் (மேயர்) என்றால் பொருத்தம்,மிக ஜாஸ்தியான முன்னறிவிப்பு... தென்னவன் ஏற்று கொள்வீர்களா...?

    Reply : 0       0

    meenavan Sunday, 30 September 2012 04:26 PM

    தமிழ் தேசிய கூட்டமைப்பு + மு.கா. ஆட்சி அமைப்பு = மு.கா. முதலமைச்சர் சம்பந்தன் ஐயா பகிரங்க அறிவிப்பு.

    பொதுஜன ஐக்கிய முன்னணி +மு.கா.-முதலமைச்சர் = இரு அமைச்சு பதவி + சரணாகதி அரசியல்

    Reply : 0       0

    Thannisaamy Sunday, 30 September 2012 10:49 AM

    நல்லா இருக்கு

    Reply : 0       0

    வசந்தகுமார். Sunday, 30 September 2012 09:08 AM

    யானைக்கு ஒரு காலமென்றால் பூனைக்கும் ஒரு காலமுண்டு. இனியாவது தமிழினம் ஒன்றுபட்டு நீதிக்கும் நேர்மைக்கும் தலைவணங்குவோமாக.

    Reply : 0       0

    jesmin Sunday, 30 September 2012 07:55 AM

    தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை தருவதாக வக்களித்தது. உங்கள் தலைவரோ...... தனது கட்சியை சேர்ந்த ஒருவரையோ அல்லது அ.இ.மு.கா, அ.இ.தே.கா. கட்சிகளை சேர்ந்த ஒருவரையோ முதலமைச்சராக வரவிடாமல் ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க துணைபோயுள்ளார். இது முஸ்லிம் காங்கிரஸை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாக தெரியவில்லையா..?

    Reply : 0       0

    cader Sunday, 30 September 2012 07:52 AM

    அரசியல்வாதி அய்யா...?

    Reply : 0       0

    Kamran Sunday, 30 September 2012 05:39 AM

    தம்பி, எம்.பி ஒன்றும் காமடி கீமடி பன்னலயே?
    முழு பூசனிக்காயை சோத்தில் மரைக்காதீங்கோ சார்!!!!!!!!!!

    Reply : 0       0

    eujina Sunday, 30 September 2012 05:36 AM

    மூன்று மாதம் தருகிறேன் மந்திரி பதவிகளும் பிரதி மந்திரி பதவிகளும் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்களுக்கு கிடைக்கவில்லை என்றால் ராசா நீங்க சொல்லுவது சரி என்று நம்புவோம்...

    Reply : 0       0

    Ansar Saturday, 29 September 2012 04:40 PM

    அய்யா தமிழர் அரசியலை போல உங்களுக்கு செய்ய முடியாதுதான். அவர்கள் போல வெட்கம், சூடு, மானம், பதவிக்கு அலையாத தன்மை எதுவும் நம்மவரிடம் இல்லையே...

    Reply : 0       0

    samalfasi Sunday, 30 September 2012 04:38 AM

    திரு.மீனவன் சார், !!!

    நீங்க சொன்னமாதிரி, ""///தமிழ் தலைமையே உங்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை தருவதற்கே ஆயத்தமான நிலையில்,சர்வதேச சமுகம் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்க அழுத்தம் கொடுத்ததா....? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் அரசியல் ஆசாமி நீங்கள் தான்... குப்புற விழுந்து மூக்கு உடைந்தாலும் நல்ல காலம் மீசையில் மண்படவில்லை.....?? ////"""

    தமிழ் கூட்டமைப்பு எங்க ஆட்சி அமைச்சது சார்.....அவர்கள் விட்டுக் கொடுக்க ...!!! அவரு சொல்ல வந்தது அரசாங்கத்துடன் இருக்கும் ஒரு தமிழருக்கு அமைச்சு பதவி கொடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக.....

    உங்க விளக்கமில்லா! விளக்கம்தான்... நீங்க சொன்ன மாதிரி>> இருக்கு.....

    Reply : 0       0

    mursith Sunday, 30 September 2012 04:33 AM

    நீங்களும் உங்க கருத்தும்..

    Reply : 0       0

    கல்முனையான் Sunday, 30 September 2012 02:23 AM

    அல்லாஹ்வை மறந்து பேசக்கூடாது... இப்படித்தான் மந்திரி பதவி தருவாரு எண்டு நம்பி சிலர் கத்தினார்... இப்போ நீங்களுமா? உங்கள நாங்கள் மேயர் ஆக்கல்லிய, எம்பி ஆக்கலியா? அதுக்கு பலனாகத்தான் கல்முனையை எம்டியாக்கிட்டிங்களே... மரணத்தறுவாயில் ரொம்பவும் அனுபவிப்பீர்கள்...

    Reply : 0       0

    Kuruvi Saturday, 29 September 2012 10:36 PM

    ஹரிஸ் அவர்களே, தமிழர் ஒருவரை முதலமச்சராக்குமாறு சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவில்லை... மாறாக இலங்கையில் தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்படுகிறது போன்ற சர்வதேசத்தின் குற்றச்சாட்டை சமாளிப்பதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு தமிழர் ஒருவரை (பிள்ளையானை) முதலமைசராக்க வேண்டும் என்பதே உண்மை. உங்களை குறைகூறுவதா அல்லது உங்களுக்கு வாக்களித்தவர்களை குறைகூறுவதா என்று உங்களைப்போல் எனக்கும் ஒன்றும் புரியவில்லை சார்....!!!!

    Reply : 0       0

    Kuruvi Saturday, 29 September 2012 09:49 PM

    எத்தனை கோடியை வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டி இடுவதற்கு இடம் அளித்தீர்கள்..??

    Reply : 0       0

    kiyas Saturday, 29 September 2012 09:45 PM

    உங்கள் பலம் என்ன என்று எங்களுக்கு தெரியும்...

    Reply : 0       0

    rima Saturday, 29 September 2012 06:31 PM

    சத்தியமாக மு.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வெல்ல முடியாது...

    Reply : 0       0

    meenavan Saturday, 29 September 2012 04:44 PM

    தமிழ் தலைமையே உங்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை தருவதற்கே ஆயத்தமான நிலையில்,சர்வதேச சமுகம் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்க அழுத்தம் கொடுத்ததா....? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் அரசியல் ஆசாமி நீங்கள் தான்... குப்புற விழுந்து மூக்கு உடைந்தாலும் நல்ல காலம் மீசையில் மண்படவில்லை.....?

    Reply : 0       0

    Kanavaan Saturday, 29 September 2012 04:40 PM

    நீங்கள் கூறுவதை இங்குள்ள முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களேயானால் அவர்களைப் போல் மடையர்களும் இருக்க முடியாது, உங்களைப் போன்றதொரு அறிவாளியும் இங்கு இருக்கவே முடியாது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X