2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தேர்தலின் வெற்றிக்காக உழைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த மக்களுக்கு நன்றி கூறும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் நேற்று திங்கட்கிழமை மாலை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரிக்கு அண்மையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பஷீர் சேகுதாவுத், கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீர் நஸீர் அகமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல், ஏ.எஸ்.நஸீர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில்; கலந்து கொண்டனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா முஷஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களுக்கு கட்சி ஆரதவாளர்களால் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.







  Comments - 0

  • meenavan Tuesday, 23 October 2012 06:29 AM

    தேர்தல் வெற்றிமூலம் பேரம் பேசும் சக்தியாக மாறி பின்பு சோரம் போய் "திவிநெகும" ஆதரவு வழங்கினார்கள்,சரணாகதி அரசியலின் அடுத்த காண்டத்திட்கான அத்திவாரம், வெற்றிக்கு உழைத்த மக்களுக்கு என்ற பெயரில் 13வது திருத்த சட்டத்தை நீக்குவதற்கு இடப்படுகிறது ....அப்படித்தானே மு.கா.தலைவரே....?

    Reply : 0       0

    rima Tuesday, 23 October 2012 07:57 AM

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறையில் அழிந்து போய் விட்டது. யா அல்லா இந்த முஸ்லிம் காங்கிரஸயை ஆழிப்பாயாக இது முஸ்லிம்கல அழிக்கும் கட்சி

    Reply : 0       0

    ஊர்க்குருவி Tuesday, 23 October 2012 08:19 AM

    பொய், புரட்டுக்களை அள்ளிக்கொண்டு வருவார் போவார் மக்களை ஏமாற்றுவார். இந்தப் பேரினவாத அரசிடம் அவரின் தேவைக்காக எமது முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குப்பலத்தை விற்று ஒருசிலரின் சொந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள். இதுதான் இப்போதைய நமது முஸ்லிம் காங்கிரசின் கொள்கை. "கேட்பவன் கேனையன் என்றால் எலிக்கும் ஏறோப்பிலன் பறக்குமாம்" இதுதான் இப்போதைய ஹக்கீமும் அவரது அடிவருடிகளினதும் கொள்கையாகிவிட்டது.

    Reply : 0       0

    rima Tuesday, 23 October 2012 11:56 AM

    அன்று சொன்னான் தேவன், ஹக்கீமிம் பொம்மை ஆட்சி வேண்டாம் என்று. இன்று ஹக்கீம் அரசிடம் சென்று பதவி கொடுங்கள் என்று கெஞ்சுகிறார். இப்படியொரு தலைவர் முஸ்லிம் சமூகத்துக்கு வேண்டுமா? இவரை எப்படி நம்புவது?

    Reply : 0       0

    Amparai District Tuesday, 23 October 2012 12:15 PM

    45 நாட்கள் தேவைப்பட்டுள்ளது வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லுவதக்கு மு.க.தலைவருக்கு. அவரின் அடுத்த வருகையை அடுத்த தேர்தலில் காணலாம்.....................

    Reply : 0       0

    Aliyar Wednesday, 24 October 2012 04:19 AM

    இது மட்டுமல்ல ஊரார் மாடு அறுட்டு உம்மா பெயரில் கத்தம் ஓதும் செயல்தான் மகாவித்தியாலய கல்நடும் விழாவும்..

    Reply : 0       0

    Ababeel Wednesday, 24 October 2012 06:30 AM

    பொன்னாடைகளும் நினைவுச் சின்னங்களும் பெற்றவர்கள் மக்களை அடகு வைத்து விட்டு வெளிநாடு சென்று அரசியல் தஞ்சம் புகுந்து விடுவார்கள்... மக்கள் கதி அதோ கதி தான்... அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து கலிமாவை உள்ளத்தால் மொழிந்து மீண்டும் இஸ்லாத்துக்குள் வந்து முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் இருப்புக்களையும் பாதுக்காக்க வேண்டிய தருணமிது..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X