2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மாவீரர் தின துண்டுப்பிரசுரங்களுடன் ஐவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 27 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

மாவீரர் தினத்திற்கான துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

அந்த துண்டுப்பிரசுரங்களை அக்கரைப்பற்று பிரதேசத்தில விநியோகிப்பதற்காக முச்சக்கரவண்டியில் எடுத்துச்சென்றதாகக் கூறப்படும் ஐந்து பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து  துண்டுப்பிரசுரங்களையும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே துண்டுப்பிரசுரங்கள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் இந்த 5 சந்தேக நபர்களும் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்தாக பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X