2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பரீட்சையில் மோசடி; அட்டாளைச்சேனை பாடசாலையொன்றில் மீள்பரீட்சை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 08 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மூன்றாந் தவணைப் பரீட்சை மோசடிகளை அடுத்து மேற்படி மாணவர்களுக்கு மீள்பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த பாடசாலையைச் சேர்ந்த தரம் 10 மாணவர்களுக்கே இவ்வாறு மீள்பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் மூலமாக - சில பெண் மாணவியர்கள் தமக்கான பரீட்சை வினாக்களுக்குரிய விடைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பரீட்சைக்குத் தோற்றியமை தெரிய வந்ததையடுத்தே மீள்பரீட்சைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கணிதம், விஞ்ஞானம், புவியியல் மற்றும் வரலாறு ஆகிய 04 பாடங்களின் பரீட்சை வினாக்களுக்கான விடைகளை முன்கூட்டியே குறித்த மாணவிகள் தெரிந்து கொண்டு பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை பாடசாலை நிருவாகத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதேவேளை, வழமையாக குறைவான புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் குறித்த பாடங்களில் அதிகூடிய புள்ளிகளையும் பெற்றிருந்தனர்.

குறித்த பாடசாலையின் பரீட்சைக் குழுவிலுள்ள ஆசிரியர் ஒருவரே - பெண் மாணவியர் சிலருக்கு குறித்த வினாத்தாள்களுக்கான விடைகளை ரகசியமாக முன்கூட்டியே வழங்கியிருந்தமை இதன்போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பாடசாலை நிருவாகத்தினர் விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த ஆசிரியரே பரீட்சைக்கான விடைகளை தமக்கு முன்கூட்டியே வழங்கியதாக சம்பந்தப்பட்ட மாணவியர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, குறிப்பிட்ட 04 பாடங்களுக்குமான பரீட்சைகள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீளவும் நடத்தப்பட்டன. அரசாங்கப் பாடசாலைகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று மூன்றாந் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்ட நிலையிலேயே – அன்றைய தினம் மேற்படி மாணவர்களுக்கு பரீட்சைகள் நடத்தப்பட்டன.

இதனால், இப்பாடசாலையின் தரம் 10 மாணவர்களுக்கான பெறுபேற்று அறிக்கைகள் வழங்கப்படாமலேயே மூன்றாந் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பரீட்சை வினாக்களுக்கான விடைகளை மாணவர்களுக்கு தவறான முறையில் முன்கூட்டியே தெரியப்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியரை பாடசாலையின் பரீட்சைக் குழுவிலிருந்து உடனடியாக இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மீள் பரீட்சைகளை நடத்திமைக்கான செலவுகளை மோசடியில் ஈடுபட்ட குறித்த ஆசிரியரே பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மேற்படி பரீட்சையில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, பாடசாலை நிருவாகத்தினர் இன்று சனிக்கிழமை வரை - தமது மேலதிகாரியான அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கவில்லை என்பதும், மீள் பரீட்சை நடத்துவதற்கான எழுத்து மூல அனுமதியினை வலயக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாந் தவணைப் பரீட்சைகளுக்கான வினாப்பத்திரங்கள் வலயக் கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்படுவது வழமையாகும். ஆயினும், இம்முறை குறித்த பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் பாடசாலைகளிலேயே தாயாரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே இவ்வாறானதொரு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • Hamza Monday, 10 December 2012 02:23 AM

    இது போன்ற குளறுபடிகள் இங்கு சர்வ சாதாரணமாகவே நடைபெறுகின்றன. இது அட்டாளைச்சேனையின் தேசீய பாடசாலையாகும். அதிபருக்கு நிர்வாகமே தெரியவில்லை. பரீட்சைக்குழுவுக்கு பொறுப்பான, புவியியல் கற்பிக்கும் ஆசிரியரே மாணவிகளை துஷ்பிரயோகம் சிய்யும் நோக்கிலேயே இவ்வறு நடந்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவு. பரீட்சைக்குழுவிலிருந்து தள்ளி வைப்பதும் பரீட்சைக்கான செலவுகளை இவரிடமிருந்து பெற்றுக்கொள்வதுமே இவருக்கு விதிக்கின்ற தண்டனை என்றால் இது யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இதற்கு முதலில் பொலீசில் முறைப்பாடு செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்பொள்ளாப்படுவதுடன், திணைக்கள ஒழுக்காற்று நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இது இவ்வாறான ஆசிரியர்களுக்கு பாடமாய் அமைய வேண்டும்.

    Reply : 0       0

    Ali Ahamed Monday, 10 December 2012 02:29 AM

    ஐயோ! இந்த ஆசிரியர் இதற்கு முன்னரும் உயர்தர‌ பரீட்சை வினாப் பத்திரங்களை முன்கூட்டியே வெளிப்படுத்தி மாட்டிக்கொண்டவர். இவருக்கு தகுந்த தண்டனை இப்போதாவது வழங்கப்பட வேண்டும். இவர் ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கானவர்.

    Reply : 0       0

    Hassan Basit Monday, 10 December 2012 01:31 PM

    இவ்வாறானவர்கள் ஆசிரியத்தொழிலுக்கு சாபக்கேடானவர்கள். பாடசாலையை குழி தோண்டிப்புதைக்கும் "பத்தா" குழுவில் இவரும் ஒருவர். இவர்களை கூண்டோடு ஒழிக்கும் வரை பாடசாலைக்கு விமோசனம் இல்லை.

    Reply : 0       0

    அப்துல் பத்தாஹ் Monday, 10 December 2012 01:43 PM

    இவை யாவற்றுக்கும் முக்கிய காரணகர்த்தா அதிபரே ஆவார். முடியாத வேலை எதற்கு? இந்த அதிபர் தனது பங்காளியான குற்றம் புரிந்த ஆசிரியரை எப்படி தப்பிக்க‌ வைக்கலாம் என்று பார்ப்பாரேயன்றி அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பார் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். "சொல்லாமல் செய்வார் பெரியார் - சொல்லியும் செய்யார் கயவர்" இவர் யாரென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!!!

    Reply : 0       0

    Raj Friday, 14 December 2012 05:41 AM

    தரம் 10 ஆண்டு மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட தவனைப்பரீட்சையில் ஏற்பட்ட தவறு, அதிபரினால் சீர்செய்யப்பட்டு மீள் பரீட்சை நடாத்தப்பட்டுள்ளது. இதில் குறித்த மாணவர்களால் செய்யப்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட ஒரு கைங்காரியம் இது பாடசாலை மட்ட வெறும் தவனைப்பரீடசை, இதனை பூதாகரமாக்கி இதில் நன்மையடைய சில சக்திகள் முற்படுகின்றன.

    Reply : 0       0

    அப்துல் பத்தாஹ் Friday, 14 December 2012 10:35 AM

    அப்போ ஆசிரியர் ஒருவராலேயே இந்த நான்கு பாடங்களுக்கான விடைக்கொத்தானது சில மாணவிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளதாகவும், அந்த ஆசிரியர் மூலமே மீள் பரீட்சைகான செலவுகள் வழ்ங்கப்பட்டதாகவும் அதிபர் சென்ற வாரம் கொடுத்த வாக்கு மூலத்துக்கு (ஒலிப்பதிவு எம்மிடம் உள்ளது) என்ன ராஜ் சொல்கிறீர்கள்?

    Reply : 0       0

    Raj Wednesday, 19 December 2012 07:25 AM

    இது தரம் 10 மாணவிகளால் இப்பத்திரங்கள் களவாடப்பட்டுள்ளது. இதை அதிபரே ஏற்றுக்கொண்டுள்ளார், அதற்காக பிள்ளைகளின் சாட்சியங்களும் உள்ளன அதற்கான ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது, பின்னர் அதிபரை நீங்கள் குற்றம் சாட்டுகின்றீர்கள்? இது பாடசாலை மட்ட உள்ளக விவகாரம்? அதிபர் காரணம் காட்டி இதை சிலர் பூதாகரமாக்க முயற்சிக்கீர்களர்கள், அதிபர் இதனை பாடசாலை மட்டத்தில் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை? இவர் புதியவர் தானே? அட்டாளைச்சேனையின் நிலவரமும் இதுதான் எதற்கொடுத்தாலும் செய்தி, நிலையப்பேர் தொழிலில்லாமல் திண்டாடுகிறார்கள். இவைகள் அவர்களின் பிழைப்பு இதுதானனே நிலவரம் எதற்கெடுத்தாலும் துண்டுபிரசுரம், நீங்களும் அந்த பட்டியலில் சேர்க்கலாம் போல?

    Reply : 0       0

    அப்துல் பத்தாஹ் Wednesday, 19 December 2012 01:31 PM

    என்னய்யா சொல்றேங்க? அப்போ உங்க அதிபருக்கு சித்த சுவாதீனம் குறைவோ? எம்மிடம் குறித்த ஆசிரியரே மாணவிகளுக்கு வழங்கியதாக சொல்கிறார். அதே வேளை உங்களிடம் மாணவிகள் களவாடியதாக சொல்லியிருக்கிறார். நீங்கள் பண்ணுவதையெல்லாம் பண்ணிவிட்டு அப்பாவி மாணவிகள் தலையில் எல்லாவற்றையும் போடப்பார்க்கிறீர்களா? இதை குறித்த மாணவிகளின் பெற்றோர் அறிந்தால் என்ன நடக்கும் தெரியுமா ராஜா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X