2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் நாடெங்கும் இயங்குகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 2013ஆம் ஆண்டுக்காக பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி அம்பாறை மாவட்டத்திலுள்ள 15 நிலையங்களினால் வழங்கப்படும் 60 தொழிற்பயிற்சி கற்கைளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் தமிழ்பேசும் பிரதேசங்களில் அமைந்துள்ள நிலையங்களான - நிந்தவூர் (மாவட்ட) தொழிற்பயிற்சி வளாகத்தினால் வழங்கப்படும் தொழிற்சாலைக்கான மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா, குளிரூட்டல் மற்றும் வாயு சீராக்கி திருத்துதல், வானொலி தொலைக்காட்சி மற்றும் அதனோடிணைந்த உபகரணங்கள் திருத்துதல், தையல் (பெண்கள்), சாரதிப்பயிற்சி போன்ற கற்கைகளுக்கும் சம்மாந்துறை தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், தொழிற்சாலை மின்னிணைப்பாளர், வாகன திருத்துனர், குளிரூட்டல் மற்றும் வாயு சீராக்கி திருத்துதல், மோ.சைக்கிள் - முச்சக்கரவண்டி திருத்துனர், ஆடைதொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர், பேக்கரி தொழில்நுட்பம், மோட்டர் வைண்டிங் போன்ற பயிற்சிகளுக்கும் மத்திய முகாம் நிலையத்தினால் வழங்கப்படுகின்ற நிர்மாண கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துனர், வீட்டு மின்னிணைப்பாளர், தையல் (பெண்கள்), ஒட்டுவேலை செய்பவர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், மோ.சைக்கிள் - முச்சக்கரவண்டி திருத்துனர் பயிற்சிநெறிகளுக்கும் பொத்துவில் தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், வீட்டு மின்னிணைப்பாளர், மர கைவினைஞர், அறை பராமரிப்பாளர், சமையற்காரர், உணவு பரிமாறுபவர் ஆகிய கற்கைகளுக்கும் காரைதீவு பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், மர கைவினைஞர், அலுமீனியம் பொருத்துனர், நிர்மாண கைவினைஞர் ஆகிய கற்கைகளுக்கும் அக்கரைப்பற்று நிலையத்திலுள்ள மோட்டர் வைண்டிங், வீட்டு மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகளுக்கும் சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், வீட்டு மின்னிணைப்பாளர் பயிற்சிகளுக்கும் இறக்காமம் மற்றும் ஆலையடிவேம்பு பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் மர கைவினைஞர் கற்கைநெறிக்கும் இப்போது விண்ணப்பிக்கலாம்.

இலங்கை மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில்சார் தகைமை (என்.வி.கியூ.) அடிப்படையிலான இப்பயிற்சிநெறிகளுக்கு பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த மற்றும் இடைவிலகிய எந்தவொரு இளைஞர் யுவதியும் விண்ணப்பிக்கலாம். 1 வருடம், 6 மாதம் மற்றும் 3 மாத பாடநெறிக் காலத்தைக் கொண்ட இப்பயிற்சிநெறிகளில் அதிகமானவற்றை குறைந்த கட்டணத்திலும் சில கற்கைகளை இலவசமாகவும் தொடர முடியும் என்று மாவட்ட அலுலகம் அறிவித்துள்ளது.

தேர்ச்சி அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படும். திருப்திகரமாக பயிற்சியை பூர்த்தி செய்வோருக்கு என்.வி.கியு. மட்டம் 3 மற்றும் 4 இற்கான அரச அங்கீகாரச் சான்றிதழ் கிடைக்கும். அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட பயிற்சிநெறிகளின் பயிலுனர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவும் பயணத்திற்கான பருவகாலச்சீட்டும் பெற்றுக்கொடுக்கப்படும். அதுமட்டுமன்றி தொழில்வழிகாட்டல், வெளிக்களப் பயிற்சி மற்றும் தொழிலுக்கு அமர்த்துதல் போன்ற சேவைகளும் வழங்கப்படும்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அல்லது சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் (டிசம்பர்) 31ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு, அல்லது 'உதவிப்பணிப்பாளர், மாவட்ட தொழிற்பயிற்சி வளாகம், பிரதான வீதி, நிந்தவூர்' என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 067௨250279 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X