2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மத்தியஸ்தம் தொடர்பாக அறிவூட்டும் செயலமர்வு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

நீதியமைச்சினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மத்தியஸ்தம் தொடர்பாக அறிவூட்டம் முழுநாள் செயலமர்வு நேற்று வியாழக்கிழமை கல்முனைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கல்முனைப் பிரதேச பொலிஸ் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட இச்செயலமர்வின் பிணக்குகளுக்கான தீர்வு, மத்தியஸ்த சபைகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள், மத்தியஸ்தம் தொடர்பான நடவடிக்கைகளில் பொலிஸாரினதும், கிராம உத்தியோகத்தர்களினதும் பணிகள் தொடர்பாகவும் அறிவூட்டப்பட்டது.

கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக நீதியமைச்சின் மத்தியஸ்தம் சார்ந்த துறையின் பயிற்றுவிப்பாளர்களான வீ.சவரிநாயகம், பீ.சந்தனசர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X