2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Kogilavani   / 2013 ஜனவரி 30 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல் அஸீஸ்


கல்முனை பாண்டிருப்பு பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் கல்முனையை நோக்கி பயணித்த கார் ஒன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் பயணித்த மூவரில் ஒருவர் கடுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X