2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'திரியபியச' வீடு கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல் அஸீஸ்


தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேசத்தின் நற்பிட்டிமுனையில் அமைக்கப்பட்ட 'திரியபியச' வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கல்முனை சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் வீடற்ற சமுர்த்தி குடும்பங்களிலிருந்து  தெரிவுசெய்யப்பட்ட குடும்பத்திற்கு இவ்வீடு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது வாழ்வாதார வேலைத்திட்டத்திற்கான கொடுப்பணவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

சமுர்த்தி முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேசசெயலாளர் எம்.எம்.நௌபல், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தாகள்; பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X