2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை ஒலுவில் துறைமுகத்திற்கு அருகில் இந்தச் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து  42 வயதான இந்தச் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 4 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .