2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சட்டவிரோத வேளாண்மைக்கு வனப்பகுதியை உழுத இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருக்கோவில், வட்டமடு வனப்பகுதியில் சட்டவிரோதமாக வோளாண்மை மேற்கொள்வதற்கு நிலத்தை  உழுதுகொண்டிருந்ததாகக் கூறப்படும் இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் 2 டிரக்டர் வண்டிகளையும் இவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .