2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சீல் வைக்காத தராசுப் படிக்கல்லை பயன்படுத்திய இருவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 07 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சீல்வைக்காத நிறுவைத்தராசுப் படிக்கல்லுடன் வியாபாரத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அம்பாறை  நீதவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.பிரிங்கி முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜரானபோதே, இவர்களுக்கு நீதவான் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில்,  ஒருவருக்கு 2,000 ரூபா படி இருவருக்கும் 4,000 ரூபா அபராதம் விதித்தார்.

சீல்வைக்காத நிறுவைத்தராசுப் படிக்கல்லுடன் வியாபாரத்தில் வர்த்தகர்கள் இருவர் ஈடுபடுவதாக தமணப் பொலிஸாருக்கு கிடைத்த தகலைத் தொடர்ந்து,  இறக்காமம் மற்றும் வரிப்பொத்தான்சேனை பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது நிறுவைத்தராசுப் படிக்கல்லுக்கு சீல் வைக்காது அதனைப் பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட இவர்கள்  இருவரும் கைதுசெய்யப்பட்டு நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .