2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகள் பாவித்து மீன் பிடித்த இருவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, இறக்காமம் மற்றும் பன்னலகம குளங்களில்  தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த இருவருக்கு 7 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்யுமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி எம்.எஸ்.பிரிங்கி நேற்று புதன்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பன்னலகம, இறக்காமம் குளங்களில் கடந்த திங்கட்கிழமை காலையில் தடைசெய்யப்பட்ட சங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவரையும் கைது செய்து 13ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவிட்டு பிணையில் விடுவித்தனர்.

குறித்த நபர்கள் நேற்று அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வி எம்.எஸ்.பிரிங்கி முன்னிலையில் ஆஜரானபோது இவர்களுக்கு தலா 3 ஆயிரத்து 500 ரூபா வீதம் 7 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறும் வலைகளை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .