2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு 7,500 ரூபாய் அபராதம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, தீகவாபி பிரதேசத்திலிருந்து கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருக்கு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல், 7,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

மேற்படி சந்தேக நபர் அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை  நீதிமன்றத்தில் இன்று (27) ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் தடைசெய்யப்பட்டுள்ள கோல் சீல் ரக சிகெரட்டை வைத்திருந்த இரு சந்தேக நபர்களுக்கும் தலா இரண்டு ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .