2025 ஜூலை 09, புதன்கிழமை

தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது

Princiya Dixci   / 2015 மே 07 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

தொழில் நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா, வியாழக்கிழமை (07) நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (06) மாலை அவசரமாக இரத்துச் செய்யப்பட்டது.
 
தேசிய பாடசாலையின் அதிபர் எம்.கிருபைராஜா தலைமையில் நடைபெறவிருந்த இத்திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதி விவசாய அமைச்சர் அனோமா கமகே மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருந்தனர்.
 
நீண்ட காலத்தின் முன் இக்கட்டடத்தின் நிர்மானப்பணிகள் நிறைவுற்றபோதும் இன்றுவரை மாணவர்களால் முறையாக பயன்படுத்த முடியமால் உள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அதிபர் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாகவும் திறப்பு விழா பிற்போடப்படுவதாக பின்னர் தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .