2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 மே 08 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி பிரதான வீதியில் வியாழக்கிழமை  (07) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அப்துல் லத்தீப் (62 வயது) என்பவர் உயிரிழந்ததாகவும் காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பள்ளிக்குடியிருப்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த மோட்டார் சைக்கிள், அக்கரைப்பற்றிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிளுடன்  நேருக்கநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  

இதில் அக்கரைப்பற்று நோக்கிய வந்த மோட்டார் சைக்கிளில் சென்ற வயோதிபர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நேற்று இரவு உயிரிழந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த அக்கரைப்பற்று 6ஆம் குறிச்சியைச் சேர்ந்த அஸனார் லெப்பை முஹம்மது முஜிபர், ஆதம் லெவ்வை சாபிர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X