2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை இன்று சனிக்கிழமை (09) கைதுசெய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X