Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 மே 14 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் 8 மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு அம்பாறை மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவுவினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்டைத்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ தினமான நேற்று புதன்கிழமை பாலமுனை பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிடப்பட்டது. இதன்போது, 8 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .