2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற இருவர் கைது

Princiya Dixci   / 2015 மே 14 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சட்டதிட்டத்தை மீறி மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து கல்முனைக்கு கால்நடைகளை லொறியில் கொண்டு சென்ற இருவரை புதன்கிழமை (13) இரவு கைதுசெய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது லொறி மற்றும் 16 கால்நடைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவதினம் இரவு சவளக்கடை பிரதேசத்தில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த லொறியை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அனுமதிப்பத்திரத்தில் வழங்கப்பட்ட 14 கால்நடைகளுக்கு மேலதிகமாக 2 கால்நடைகளை சட்டதிட்டத்தை மீறி இரவில் கொண்டு சென்ற குற்றத்துக்காக இருவரை கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .