2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சூதாடிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 17 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில்  சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சூதாடுவதாக தங்களுக்கு கிடைத்த  தகவலை அடுத்து,  மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சந்தேக நபர்களிடமிருந்து  காட்ஸ் பக்கெட் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சந்தேக நபர்களை நாளை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .