2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி ஆற்றுமண் ஏற்றியவர் கைது

Thipaan   / 2015 மே 18 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று அம்பாறை வீதி ஆலிம் நகர் பிரதேசத்தில்,  அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி ஆற்றுமண் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிய நபரொருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கைதுசெய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் சாஜன் யூ.எல்.எஸ்.ஆப்தீன் தலைமையிலான குழுவினரே குறித்த நபரை கைது செய்ததுடன் மண்ணுடன் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவரை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில், இன்று (18) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X