2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

திவிநெகும முகாமையாளர் வீட்டில் திருட்டு

Princiya Dixci   / 2015 மே 18 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று, கோளாவில் பிரதேசத்தில் திவிநெகும முகாமையாளர் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு பெறுமதியான பொருட்கள் உள்ளிட்ட பணம் திருடப்பட்டுள்ளது.

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோளாவில் பிரதேசத்தில் வசிக்கும் அருந்ததி மகேஸ்வரன் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டுச் சம்பவத்தில் துவிச்சக்கரவண்டி, பெறுமதிமிக்க ரோச், அலைபேசி, உண்டியல், புதிய சிம்காட், உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களும் பணமும் திருடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .