2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 4 பெண்களுக்கு அபராதம்

Thipaan   / 2015 மே 19 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்;பிலுவில் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 4 பெண்களை தலா 10ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல்  உத்தரவிட்டார்.

இலங்கை மின்சார சபையினருடன் திருக்கோவில் பொலிஸார் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களை அக்கரைப்பற்று நீதிமன்றில், நேற்று(18)  ஆஜர் செய்தபோதே  நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .