2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கோயில் உண்டியலை உடைத்து திருடிய இருவர் கைது

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்,வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள பட்டிமேடு கண்ணகி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சந்தேகநபர்கள் இருவரை, அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று புதன்கிழமை (20) கைது செய்ததாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஆலையடிவேம்பு புளியம்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின் இன்று வியாழக்கிழமை (21) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்திருட்டு சம்பவம் இம்மாதம் 1ஆம்; திகதி இரவு இடம்பெற்றதாகவும் இந்த மாதத்துக்குள் இதுவரை ஆலையடி வேம்பு பிரதேசத்தில் நான்கு கோயில்களில் உண்டியல் உடைத்து திருடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .