2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

2ஆவது சந்தேகநபருக்கு மறியல் நீடிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியிலிருந்த அலைபேசியைத் திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 2ஆவது சந்தேக நபரையும், எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி சவளக்கடை பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் 8,000 ரூபாய் பணம், அலைபேசி என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக உரிமையாளரால் சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மற்றைய 2ஆவது நபரை, பொலிஸார் கடந்த மாதம் 19ஆம் திகதி புதன்கிழமை கைதுசெய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .