2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

3 இந்தியர்கள் கைது

Super User   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று இந்தியர்கள் இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் நாட்டை சேர்ந்த இந்த மூன்று பேரும் ஒலுவில், பாலமுனை - முள்ளிக்குளத்து வயல் பிரதேசத்தில் இன்று நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்தியர்களை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X