Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு தபாலக வீதியை அண்டி அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான புகையிலைத்தூள் புதன்கிழமை (8) கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித் திணைக்களத்தின் அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தனக்குத் தகவல் கிடைத்த நிலையில், குறித்த இடத்துக்குச் சென்று இதைக் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் ஒடிசா பகுதியிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8 ஆயிரம் கிலோகிராமைக் கொண்ட 264 மூடைகள் கைப்பற்றப்பட்டன.
குறித்த வீட்டில் பீடி உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்த அவர், அவ்வீட்டு உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில் விசாரணை இடம்பெறுவதாகக் கூறினார்.

36 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago