Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார், எம்.எஸ்.எம். ஹனீபா, ரீகே.றஹ்மத்துல்லா
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள் 21 நாட்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று (17) காலை 06 மணிக்கு பகுதியளவில் தளர்த்தப்பட்ட நிலையில், மக்கள் வழமை நிலைக்கு திரும்பி, தங்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று பகுதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நவம்பர் மாதம் 26ஆம் திகதி அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிரப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேங்களில் பகுதியளவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில், சுகாதார திணைக்களம், பொலிஸாரின் அறிவுறுத்தல்களுக்கமைய, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும், சமூக இடைவெளிகளையும் பேணி, அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர்.
இப்பிரதேசங்களில் அத்தியவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் உட்பட மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன. வங்கிகள் உட்பட அரச, தனியார் நிறுவனங்கள் இயங்கியதை காண முடிந்த போதிலும் மக்களின் வருகை மந்தகதியில் காணப்பட்டது.
வீதி ஓரங்களில் நடைபாதையில் மரக்கறிகள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்கரைப்பற்று-14 (காதிரியா வடக்கு), நகர் பிரிவு-03, அக்கரைப்பற்று-05, அக்கரைப்பற்று பிரதான சந்தை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை-08, பாலமுனை-01, ஒலுவில்-02 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் அக்கரைப்பற்று-08/1, அக்கரைப்பற்று-08/03, அக்கரைப்பற்று-09 ஆகிய பிரிவுகளும் தொடர்ந்து தனிமைப்படுத்தல் பிரதேசமாக அமுலில் இருக்குமென, சுகாதரா பகுதியினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago