Editorial / 2018 ஜனவரி 25 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ .ஆர் .றுஹைம் றூமி
“கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே, இப்பிரதேச மக்கள் எமக்கு வாக்களிக்கின்றனர். எனவே, அதனை இலட்சியமாகக் கொண்டு தொழிற்படுவதற்கு நான் முயற்சிப்பேன். அவ்வாறு முன்கொண்டு செல்ல என்னால் முடியாமல் போகுமாயின், நான் உடனடியாக எனது பதவியை இராஜினமா செய்வேன்” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் வாக்குறுதியளித்தார் .
கல்முனை காசிம் வீதியில் இடம்பெற்ற வட்டாரப் பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் அல்ஹாஜ் எச் .எம் .எம் ஹரீஸ் பிரதம அதிதியாகவும் யானைச் சின்னத்தில் கல்முனையில் போட்டியிடும் அனைத்து முஸ்லிம் காங்கிரஸ் வேட்ப்பாளர்களும் கலந்துகொண்டனர் .
8 minute ago
40 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
2 hours ago
2 hours ago