2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இடமாற்றத்தை இரத்துச் செய்யவும்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

தங்களின் முறையற்ற இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய பஸ் டிப்போக்களில் பஸ் காப்பாளர்களாகக் கடமையாற்றுவோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏனைய மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 40 காப்பாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், இலங்கை போக்குவரத்துச் சபையின்  கிழக்கு மாகாண கல்முனை அலுவலகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

தங்களை முறையற்ற விதத்தில்  இடமாற்றம் செய்துள்ளதாகத் தெரிவித்த காப்பாளர்கள், இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த இடமாற்றத்தைச் இரத்துச் செய்யாவிடின்;, உண்ணாவிரதப் போராட்டம் தம்மால் முன்னெடுக்கப்படும் எனவும் காப்பாளர்கள் கூறினர்.

இது தொடர்பாக இ.போ.சபையின் கிழக்கு மாகாணத்துக்கான சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் எ.எல்.சித்தீக்கிடம் கேட்டபோது, 'இ.போ.சபையின்   கிழக்குப் பிராந்தியத்தில்; மேலதிகமாக 92  காப்பாளர்கள் கடமையற்றி வருகின்றனர். இதனால், 40 பேர் மற்றும் 21 பேர் என்ற அடிப்படையில் இரண்டு கட்டங்களாக இடமாற்றங்களை மேற்கொள்ளுமாறு எமது தலைமைக் காரியாலயத்தால் எழுத்து மூலம் எங்களுக்கு பணிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே இவர்களுக்கு கடந்த வாரங்களில்  இடமாற்றம் வழங்கப்பட்டது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X