Princiya Dixci / 2022 மார்ச் 29 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
பிரதேச பொதுமக்களுக்கு அசௌகரியம் இல்லாத வகையில் இறைச்சி விற்பனையில் ஈடுபடுமாறு, மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்கு, அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அகமட் ஸகி வலியுறுத்தினார்.
அக்கரைப்பற்று மாநகர மேயரை, மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் நேற்று (28) சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் மாநகர ஆணையாளர், மாநகர சபை கணக்காளர் மற்றும் மாநகர சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் பயனாக, இன்று முதல் (29) அக்கரைப்பற்று மாநகர ஆளுகையில் உள்ள மாட்டிறைச்சிக் கடைகளில் தனி இறைச்சி கிலோகிராம் 1,250 ரூபாய்க்கும், முள்ளுடன் இறைச்சி (இறைச்சி-800 கிராம், முள்ளு-200 கிராம்) கிலோகிராம் 1,100 ரூபாய்க்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி கடைகளில் கட்டாயம் டிஜிட்டல் தராசு பாவனையுடன், விலைப்பட்டியலை மக்களின் பார்வைக்கு வைத்திருக்க வேண்டுமென மாநகர மேயரால் உத்தரவிடப்பட்டது.
மேலும், புனித ரமழான் மாதத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் சீரான முறையில் இறைச்சி விற்பனை இடம்பெற வேண்டும் என்றும் மேயர் கேட்டுக் கொண்டார்.
மேற்படி நிபந்தனைகளை மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனடிப்படையில், இறைச்சி கடைகளை திறக்க இணக்கம் காணப்பட்டது.
விலைக்குளறுபடிகள் மற்றும் பொதுமக்களுக்கு முறையான இறைச்சி விறியோகமின்மை போன்ற காரணங்களால் அக்கரைப்பற்றில் கடந்த ஒரு வார காலமாக மாட்டிறைச்சிக் கடைகள் மாநகர சபையின் உத்தரவின் பேரில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago