Janu / 2024 ஜூலை 31 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் 6 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் மற்றும் பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை (30) இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (30) குறித்த போதை பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றி வளைத்து சோதனையிட்டபோது வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவரை 6 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்
அதேவேளை 43 வயதுடைய பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர். இந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராசா சரவணன்
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago